கழற்சிக்காயின் மருத்துவ குணம் பற்றி அகத்தியர் பாடல்‘விரை வாதஞ் சூலையறும் வெட்டையன் லேகும்நிரை சேர்ந்த குன்மம் நிலையா - துரை சேர்அழற்சி விலகும் அருந்திற் கசப்பாங்கழற்சியிலை யென்றுரைக்குங் கால்.’- அகத்தியர்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0226
Rs. 45.00
கழற்சிக்காயின் மருத்துவ குணம் பற்றி அகத்தியர் பாடல்
‘விரை வாதஞ் சூலையறும் வெட்டையன் லேகும்
நிரை சேர்ந்த குன்மம் நிலையா - துரை சேர்
அழற்சி விலகும் அருந்திற் கசப்பாங்
கழற்சியிலை யென்றுரைக்குங் கால்.’
- அகத்தியர் குணபாடம்
மிகவும்
கசப்பு நிறைந்த கழற்சி இலையை உள்ளுக்கு மருந்தாகக் கொள்வதால் அண்ட வாதம்
என்னும் விரை வாதம் குணமாகும். வயிற்றுவலி போகும். வெள்ளை ெவட்டை என்னும்
உஷ்ணப் பிணிகள் ஓடும். மிகுதிப்பட்டு துன்பம் தரும் வயிற்றுப்புண்(அல்சர்)
குணமாகும். வீக்கம் எதுவாயினும் கரையும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள்
ஆகும். இவை மட்டுமின்றி முறை வைத்து வந்து துன்புறுத்தும்(Anti periodic)
நோய்கள் விலகியோடும். டானிக் போல ஊட்டச் சத்தினைத் தரும், ருது உண்டாக்கி
மற்றும் பால் பெருக்கி என்கிற வகையில் மருந்தாகியும் பயன் தருவதாகும்.