For Cold, Cough problems தூதுவளை Solanum trilobatum கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது. தூதுவளையை பொடியை காலை, மாலை எனஇருவேளையும்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0028
Rs. 60.00
For Cold, Cough problems
தூதுவளை Solanum trilobatum
கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது.
தூதுவளையை பொடியை காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
தூதுவளை ரசம்:
தேவையானப்பொருட்கள்:
தூதுவளை பொடி- 20 கிராம்
தக்காளி-1
பூண்டு-4 பல்
புளி-நெல்லிக்காய் அளவு
உப்பு-தே.அளவு
துவரம் பருப்பு-கால் கப்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
ரசப் பொடி-1 டே.ஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
பெருங்காயம்-2
கறிவேப்பிலை-1
செய்முறை: முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும். புளியை கரைத்து எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து,அதனுடன் ரசப் பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.தேவையான உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து ,கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை, தூதுவளை பொடி சேர்த்து வதக்கி மற்ற பொருக்களை சேர்த்து கொதிக்க வைத்து ,நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்