5 கிராம் முதல் 10 கிராம் அளவு சத்யம் நிலவேம்பு நிலவேம்பு குடிநீர் சூரணத்தை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப் போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான…
Product Type :
Availability : In Stock
Product Model : M0108
Rs. 60.00
5 கிராம் முதல் 10 கிராம் அளவு சத்யம் நிலவேம்பு நிலவேம்பு குடிநீர் சூரணத்தை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப் போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. அதன்பின் குடித்தால் எந்த பலனும் இருக்காது. எனவே ஒவ்வொரு வேளைக்கும் கசாயத்தை புதிதாக தயாரித்து குடிப்பதே நல்லது.
குடல் புண் உள்ளவர்கள் நிலவேம்பு கஷாயத்தை உணவிற்கு பின் சாப்பிடலாம்.
இந்த கஷாயம் மொத்தமாக தயார் செய்வதற்கு, 500 கிராம் நிலவேம்பு பொடியை எடுத்துக்கொண்டு, 60 லிட்டர் நீர் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர், 15 லிட்டர் ஆக சுண்டிய பின், இறக்கி ஆற வைத்து வடித்து விட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம். ஆனால் வயதிற்கேற்றாற் போன்று வழங்க வேண்டும். பெரியவர்களுக்கு, 30 முதல் 60 மில்லி வரையிலும்; ஒரு வயது முதல் 3 வயது வரை, 2.5 மில்லி லிட்டரும், 3 வயது முதல் 5 வயது வரை, 5 மில்லி லிட்டரும், 5 வயது முதல் ஏழு வயது வரை, 10 மில்லி லிட்டரும், 7 வயது முதல் 14 வயது வரை, 20 மில்லி லிட்டரும், 14 வயதுக்கு மேல், 30 மில்லி லிட்டரும் வழங்கலாம். குடல் புண் உள்ளவர்கள் உணவுக்கு பின் அருந்தலாம்.
கர்ப்பிணி பெண்கள் வாந்தி அல்லது வாந்தி உணர்வு இருப்பின் மாதுளை பழச்சாறு அருந்த வேண்டும். குழந்தைகளுக்கு சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
மது மேக நோய்க்கு மருத்துவம் மேற்கொண்டு வருபவர்கள் உணவுக்கு பின் அருந்தலாம். நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி
நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது என்பது குறிபிடதக்கது.