ஆவாரை. 1. மூலிகையின் பெயர் -: ஆவாரை. 2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA. 3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE. ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ” ஆவாரம்பூ தங்கமேனவே சடத்திற்கு…
Product Type :
Availability : In Stock
Product Model : M0197
Rs. 25.00
ஆவாரை.
1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.
2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ”
ஆவாரம்பூ
தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு
மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்
பூவைச் சேராவாரம் பூ
– ( பதார்த்த குண விளக்கம் )-
ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின்விலையும் அதிகம் . ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் .
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி,சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்திவந்தால், உடலை நோயின்றி ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ளலாம்.