பிரசவத்திற்கு பின் புண்ணை ஆற்றும் சக்திகொண்ட, பிரசவ லேகிய பொடி பிரசவத்திற்கு பிறகு ஒரிரு மாதங்கள் வரை தாய்க்கு உணவு செரிமானத்தில் குறைபாடு நிலவும். இதனை தவிர்ப்பதற்வே பிரசவ லேகிய பொடி பிரசவத்திற்கு…
Product Type :
Availability : In Stock
Product Model : M0107
Rs. 60.00
பிரசவத்திற்கு பின் புண்ணை ஆற்றும் சக்திகொண்ட, பிரசவ லேகிய பொடி
பிரசவத்திற்கு பிறகு ஒரிரு மாதங்கள் வரை தாய்க்கு உணவு செரிமானத்தில் குறைபாடு நிலவும். இதனை தவிர்ப்பதற்வே பிரசவ லேகிய பொடி
பிரசவத்திற்கு முன் இயற்கையிலேயே கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் தடுப்பு சக்தியும், எதிர்ப்பு திறனும் அமைந்துள்ளது. எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகும். பிரசவம் ஆன உடனேயே பல மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. முக்கியமாக கர்ப்பப்பையில் தங்கியிருக்கும் உதிரம், மற்ற நிணப் பொருட்கள் முற்றிலும் வெளியேற பல பெண்களுக்கு வெகு நாட்கள் ஆகும். அதனால் சிறிது சிறிதாக பல நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.
பிரசவித்த தாய்மார்களுக்கு ஜீரண சக்தி குறைவு. அதனால் எண்ணெய் சேர்க்கக் கூடாது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடும் கத்தரி, வெண்டை, முருங்கை, சௌசௌ, கீரைகள், இவற்றை எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து மிகவும் குறைந்த நெய்யில் தாளித்து உப்பு மிளகு பொடி சேர்த்து கொடுக்கலாம்.
கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் தாய் மீண்டும் பழய நிலைக்கு திரும்ப கொடுக்க வேண்டியது பிரசவ லேகிய பொடி. இப்பொடியை பாலில் கலந்தோ,அல்லது லெகியமாக கிண்டியோ கொடுக்கலாம். இதை தாய்ப்பால் கொடுப்பது நிறுத்தும் வரையில் சாப்பிடவும்.
இது ஜீரண சக்தியையும் அதிகப்படுத்தும். இது உடல் உள் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதால் இதை சாப்பிடும் நாட்களில் பால், நெய், தயிர், போன்ற குளுமையான பொருட்களும் சேர்த்துக் கொள்ளலாம்.