அஸ்வகந்தா. மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா. தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL. தாவரக் குடும்பம் -: SOLANACEAE. அமுக்கரா பொடி மூட்டுகளை, தசைகளை, கார்டிலேஜை என அனைத்தையும் வலுப்படுத்தி, வயோதிகத்…
Product Type :
Availability : In Stock
Product Model : M0088
Rs. 80.00
அஸ்வகந்தா.
மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.
தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.
தாவரக் குடும்பம் -: SOLANACEAE.
அமுக்கரா பொடி
மூட்டுகளை, தசைகளை, கார்டிலேஜை என அனைத்தையும் வலுப்படுத்தி, வயோதிகத் தள்ளாமையையும் சரிப்படுத்தும்.எல்லாவித மூட்டு வலிகளால் அவதிப்படுவோரும் சாப்பிடலாம்.ஆண்மையுடன் அழகாக இருக்க அமுக்கரா பொடி சாப்பிடலாம்.
அமுக்கரா கிழங்குப் பொடியை தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
அமுக்கரா பொடி10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.
இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம்.
அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.