"நீலகிரி தைலம்' எனப்படும் "யூகலிப்டஸ் ஆயில்' (Eucaliptus oil) நாடு முழுவதும் பிரபலம். ஆங்கிலேயர் ஆட்சியில், 1848ல் ஆஸ்திரேலியாவில் இருந்து யூகலிப்டஸ் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, ஊட்டியிலுள்ள…
Product Type :
Availability : In Stock
Product Model : M0071
Rs. 85.00
"நீலகிரி தைலம்' எனப்படும் "யூகலிப்டஸ் ஆயில்' (Eucaliptus oil) நாடு முழுவதும் பிரபலம். ஆங்கிலேயர் ஆட்சியில், 1848ல் ஆஸ்திரேலியாவில் இருந்து யூகலிப்டஸ் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, ஊட்டியிலுள்ள ஆரம்பி வனப்பகுதியில் வளர்க்கப்பட்டன. இதில், 32 வகை நாற்றுகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் வளர்க்கப்பட்டன. அதன் இலைகளில் இருந்து தைலம், திரவியம் தயாரிக்கப்பட்டதால், அதற்கு "நீலகிரி தைலம்' என்ற பெயர் வந்தது.
இரவில் ஏற்படும் மூக்கடைபிற்கு கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ்ஆயிலை (Eucaliptus oil) ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.
குளிக்கும் போது சுடுநீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து குளித்து வந்தால், அந்த நறுமணத்தால் முதுகு வலி, உடல் வலி என அனைத்து வலிகளும் நீங்குவதோடு, மன அழுத்தமும் நீங்கும்.
யூகலிப்டஸ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து வெதுவெதுப் பான எண்ணெயை விட்டு கலந்து, கூந்தலுக்கு நன்கு தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் தடைபட்டு, அதன் வளர்ச்சி அதிகமாகும்.
Antiseptic and deodorant, used externally for common cold, cough head ache inhaled with steam, relieves cough in chronic bronchitis and asthma.