Sirukan peelai சிறுகச் பீளை dry 100s

சிறுகண்பீளை        ஈரலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் அற்புதமான மருந்தாகிறது சிறுகண்பீளை. இது, உள் உறுப்புகளின் அழற்சியை போக்குகிறது. கற்களை கரைக்கும் வல்லமை உடையது. வெள்ளைபோக்கு பிரச்னையை குணமாக்கும்.…

Product Type :

Availability : In Stock

Product Model : SIRU 01

Price Of Product :

Rs. 60.00

Add To Cart

Review This Product

சிறுகண்பீளை

        ஈரலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் அற்புதமான மருந்தாகிறது சிறுகண்பீளை. இது, உள் உறுப்புகளின் அழற்சியை போக்குகிறது. கற்களை கரைக்கும் வல்லமை உடையது. வெள்ளைபோக்கு பிரச்னையை குணமாக்கும். புண்களை ஆற்றக் கூடியதாக விளங்குகிறது. சீத, ரத்த கழிச்சலை நிறுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது.


சிறுகண்பீளையின் பூக்கள், இலை, தண்டு, வேர் என அனைத்து பகுதிகளும் மருந்தாகிறது. தை மாதத்தில் அதிகம் கிடைக்கும் இந்த சிறுகண்பீளையை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, பனங்கற்கண்டு, பால்.


செய்முறை: சிறுகண்பீளையின் இலை, பூக்கள், தண்டு, வேர் ஆகியவற்றை அரைத்து பசையாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும். வலி குறையும். உடல் வலிமை பெறும். மாதவிலக்கால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, ரத்தசோகை, சோர்வு, உடல் மெலிவு போன்றவற்றுக்கு  மருந்தாகிறது.


சிறுகண்பீளையை கொண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, கருஞ்சீரகம், சிறுநெறிஞ்சில் பொடி, பனங்கற்கண்டு.செய்முறை: சிறுகண்பீளை செடியை சிறுசிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சிறுநெறிஞ்சில்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீரக பை, சிறுநீர் பாதை, பித்தப்பை, ஈரல் ஆகியவற்றில் ஏற்படும் கற்கள் கரையும். இடுப்பு வலி, வயிற்று வலி, சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், வாந்தி, குமட்டல் பிரச்னைகளை குணப்படுத்தும் மருந்தாக சிறுகண்பீளை விளங்குகிறது.

          சிறுகண்பீளையை பயன்படுத்தி புண்கள், கொப்புளங்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் சிறுகண்பீளை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை வடிக்கட்டி பூசிவர அடிபட்ட காயம், புண், அக்கிப்புண், கொப்புளங்கள் விரைவில் குணமாகும்.  

        பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. புண்களை வடு தெரியாமல் ஆற்றும் தன்மை கொண்டது


Sanskrit: Astmabayda Bengali: Chaya 

Gujrati: Gorakha Ganjo 

Hindi: Gorakhganja, Kapurijadi Kannada: Bilihindisoppu Konkani: Tamdlo 

Malayalam: Cherupula Marathi: Kapur-Madhura Mundari: Chauliara, Ledra Ara Odia: Paunsia 

Punjabi: Buikallan 

Rajasthani: Bui 

Sinhalese: Polpala 

Tamil: Sirru-Pullai, Sirukan pillai, poolaipoo

Telugu: Pindi Conda, Thelagapindi Koora Urdu: Baloot 

Available at mooligaikadai.com

Hi, I Invite you to install India's No. Herbal Shopping App tiny.sg/lDVrONU or to visit mooligaikadai.com

Related Products