தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது. …
Product Type :
Availability : In Stock
Product Model : M0194
Rs. 90.00
தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது.
காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய் போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது என்று, பதார்த்த குண சிந்தாமணி பாடல் கூறுகிறது.
சித்த மருத்துவத்தில் தூதுவளை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் காது, தொண்டை நோய்களுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகிறது. தூதுவளை உடலுக்கு உறுதியையும், சக்தியையும் அளிக்கும் காயகற்ப மூலிகை வகையை சார்ந்தது.
சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு இது ஏற்றது. பனி காலத்தில் ஏற்படும் தொண்டை கட்டுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.