Hibiscus herbal tea
செம்பருத்தி பூ தேநீர் பொடி என்பது செம்பருத்தி பூவுடன் ஆவாரம்பூ பனங்கற்கண்டு, வால்மிளகு, சீரகம், மல்லி மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்பட்டது.
செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான மூலிகை. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை தினசரி குடித்து வரலாம்.
செம்பருத்தி பூ டி பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.
இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். செம்பருத்தி பூ தேநீர் ஐ தொடர்ந்து குடித்து வர கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக குறைக்கலாம்.
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் செம்பருத்திப்பூ தேநீரை ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு தினம் செம்பருத்திப்பூ தேநீரை ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.