ஆவாரை. 1. மூலிகையின் பெயர் -: ஆவாரை. 2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA. 3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE. ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ” ஆவாரம்பூ தங்கமேனவே சடத்திற்கு…
Product Type :
Availability : In Stock
Product Model : M0178
Rs. 80.00
ஆவாரை.
1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.
2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ”
ஆவாரம்பூ
தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு
மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்
பூவைச் சேராவாரம் பூ
– ( பதார்த்த குண விளக்கம் )-
ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின்விலையும் அதிகம் . ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் .
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி,சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்திவந்தால், உடலை நோயின்றி ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.