பட்டுக் குட்டிகளுக்கு ரோஜா இதழ் குளியல் குழந்தைகளின் சருமம் மென்மையானது. பட்டுப்போன்ற அந்த பிஞ்சுகளின் சருமத்தை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்காக என சோப்புகளும்,…
Product Type :
Availability : In Stock
Product Model : M0026
Rs. 55.00
பட்டுக் குட்டிகளுக்கு ரோஜா இதழ் குளியல்
குழந்தைகளின் சருமம் மென்மையானது. பட்டுப்போன்ற அந்த பிஞ்சுகளின் சருமத்தை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்காக என சோப்புகளும், லோசன்களும் வந்துவிட்டன. அவை பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அவற்றில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கை முறையில் வீடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்தோடு குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ரோஜா இதழ் பொடியோடு, பூலாங்கிழங்கு பொடி, செம்பருத்திபூ பொடி , வெட்டிவேர் பொடி ம்ற்றும் பாசிபயறு மாவு போன்றவ்ற்றை கலந்து தேய்த்து குளிப்பட்டினால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படும்
ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. ரோஜா இதயத்திற்கு நல்லது
இரத்த விருத்தியின்மைக்கு:
ரோஜா இதழ் பொடியை கொதிக்கும் நீர் விட்டு நன்றாக கல்க்கி விட்டு அப்படியே 2 மணி நேரம் மூடி வைத்திருந்து வேறு ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரையுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரை பாகு வந்ததும் ரோஜாப் பூ நீரை விட்டு மறுபடியும் காய்ச்சி பன்னீரை (சிறிது ரோஸ் வாட்டர் கலந்து ) கிளறி தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.